ADDED : மார் 14, 2024 04:54 AM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் முத்தாலம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வலியுறுத்தி பள்ளி நிர்வாகம் சார்பில் ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் ரீட்டா செல்வராணி தலைமை வகித்தார்.
ஆசிரியர் விஜயப்பிரியா முன்னிலை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் சரவணஸ்ரீ மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சத்துணவு பொறுப்பாளர், பெற்றோர்கள், மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வலியுறுத்தினர்.
