நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி பாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து இருளன் 40, பல ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நவம்பர் 23 ல் தனக்கு சொந்தமான 30 ஆடுகளை மேய்த்து விட்டு இரவு அவைகளை கொட்டத்தில் அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று பார்த்துள்ளார்.
ரூ. 28 ஆயிரம் மதிப்பிலான நான்கு ஆடுகளை யாரோ திருடி சென்றுள்ளனர். முத்து இருளன் புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.