ADDED : செப் 19, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் 35. தாமரைக்குளம் விலக்கு பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இரவில் கடையை பூட்டி விட்டு சென்றார். மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.13 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடி சென்றனர். தென்கரை போலீசார் விசாணை செய்து வருகின்றனர்.-
