ADDED : பிப் 04, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பம் சமையன் தெருவை சேர்ந்தவர் கண்ணையா மகன் ஹரிஹரன் 21. இவர் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம். படித்தார். இவரது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதற்கென மின் ஒயர் தரையில் கிடந்துள்ளது. நேற்று டைல்ஸ் ஒட்டும் பணிகளை பார்க்க சென்ற ஹரிஹரன், மின் ஒயரை மிதித்த போது , அதில் மின் கசிவு இருந்துள்ளது. ஹரிஹரன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.