நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பூதிப்புரம் கெப்பு ரெங்கன்பட்டி சுந்தர்ராஜ், இவரது மனைவி பிரோமாஆனந்தி. இவர்களது 15 வயது மகள் தேனியில் 10ம் வகுப்பு படித்தார். நேரத்தை அலைபேசியில் செலவழித்தார். தேர்விற்கு படிக்குமாறு தாயார் திட்டினார்.
மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டாக தெரிவித்தனர். பிரோமாஆனந்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

