ADDED : செப் 02, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.3–
அரண்மனைபுதுாரை சேர்ந்த மின் ஊழியர் மயில் 54.
இவரது மகன் கிஷாந்த் 15. கிஷாந்த், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். செப்.,1 காலையில் பள்ளிக்கு புறப்படுவதற்காக வீட்டின் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. குடும்பத்தினர் கதவை உடைத்து சென்றபோது கிஷாந்த் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கிஷாந்த் பலியானார். தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
