நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், மணிமேகலை தம்பதி. இவர்களின் 17 வயது மகள் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மகள் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மணிமேகலை புகாரில் போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

