ADDED : அக் 09, 2024 06:21 AM
அ நிறம் | அளவு
போடி : போடி புதூர் போயன்துறை ரோடு வேட்டவராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேஸ்வரி 47. இவரது கணவர் மணிகண்டன் 51. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்தை நிறுத்த முடியாமலும் இருந்துள்ளார்.
மனம் உடைந்த மணிகண்டன் விஷம் குடித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மணிகண்டன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். முருகேஸ்வரி புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
