நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் :கம்பம் தினகரன் காலனியில் வசித்து வந்த மணிகன்டன் மகன் நவீன் 22, இவரது மனைவி தமிழினி 21, இவர்களுக்கு கவுசிக் 2, என்ற மகன் உள்ளார். கட்டட தொழிலாளியாக உள்ள நவீன் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.
மே 1 ல் மாலையில் நவீன் வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.