ADDED : செப் 28, 2025 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களாமேட்டில் எம்.பில்., உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குவதற்கு எதிராக தவறாக வழங்கப்பட்ட அனைத்து தணிக்கைதடை ஆணைகளையும் ரத்து செய்ய கோரி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாநில அமைப்புச் செயலாளர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் ஆனந்தகுமரன், நிர்வாகிகள் மகேந்திரன், பாபு, மாநில மகளிரணிச் செயலாளர் மஹபூப்பீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.