ADDED : நவ 21, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை வழங்க கோரியும் கலெக்டர் அலுவலகம் முன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கிருஷ்ணசாமி, கள்ளர் ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.