ADDED : பிப் 13, 2026 02:52 AM
மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் சூரிய கதிர் வீச்சு தாக்கம் அதிகரித்ததால் பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
மூணாறில் தற்போது குளிர் காலம் என்றபோதும் பகலில் வெப்பம் அதிகரித்துள்ளது. நேற்று காலை குறைந்தபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. பகலில் 29 டிகிரி செல்சியஸ்சாக அதிகரித்தது.
சூரிய கதிர் வீச்சின் தாக்கம் அதிகரித்ததாக தெரியவந்தது. அல்ட்ரா வைலட் விகிதம் (புற ஊதா கதிர்வீச்சை குறிக்கும் அளவீடு) மாநிலத்தில் மூணாறில் கடந்த 2 நாட்களாக அதிகரித்தது. அதன் குறியீடு அளவு நேற்று 8 ஆக பதிவானதால், மிக அதிக ஆபத்து என உணர்த்தும் வகையில் பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது. கதிர் வீச்சு மூலம் சரும நோய்கள் உட்பட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வலியுறுத்தி உள்ளது.

