ADDED : ஜன 07, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் ஏகலூத்து ரோடு கெஞ்சையன் குளத்தில் வசிப்பவர் முத்துப் பிள்ளை 65, இவரது கணவர் அம்மாவாசி 76, இவர் ஏகலூத்து ரோட்டில் உள்ள வெங்கடேசன் புளியந்தோப்பில் காவல் பணி செய்து வந்தார்.
தினமும் காலையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ஜன., 2ம் தேதி வந்தவர் அதன் பின் வரவில்லை.
நேற்று காலை அம்மாவாசி புளியந்தோப்பில் உள்ள வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
மனைவி சென்று பார்த்துள்ளார்.
உடல் அழுகிய நிலையில் இருந்தது. மனைவி முத்துப் பிள்ளை புகாரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

