sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்

/

துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்

துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்

துார்வாராத அருப்புகத்தான் ஓடை மழை நீர் செல்வதில் சிரமம்


ADDED : நவ 01, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே காமராஜபுரத்தில் உள்ள அருப்புகத்தான் ஓடை தூர்வாராததால் செடிகள் வளர்ந்து, குப்பை தேங்கி மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

போடி குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீரானது அணைப் பிள்ளையார் அணை வழியாக மீனாட்சியம்மன் கண்மாயில் தேக்கமாகிறது.

இங்கு நிரம்பும் நீரானது விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியை கடந்து காமராஜபுரம் அருப்புகத்தான் நீர்வரத்து ஓடை பகுதிக்கு வந்தடையும்.

தற்போது கொட்டகுடி ஆற்றில் துவங்கி காமராஜபுரம் வரை உள்ள நீர்வரத்து ஓடையின் இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்து உள்ளனர்.

காமராஜபுரத்தில் உள்ள அருப்புகத்தான் ஓடை தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. மழைநீர் சீராக செல்ல முடியாமல் ஓடையில் செடிகள் வளர்ந்து காணப்படுவதோடு, குப்பை தேங்கி கிடக்கிறது.

இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு வகையில் சுகாதாரக்கேடு ஏற்படு கிறது.

விவசாயிகள் பயன் பெறும் வகையில் அருப்புக்கத்தான் நீர்வரத்து ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us