sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்

/

 ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்

 ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்

 ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்


ADDED : டிச 11, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: ஓட்டு பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்கு பிறகு மின்னணு இயந்திரம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்து சேர்ந்தது.

மூணாறு அருகில் உள்ள இடமலைகுடி ஊராட்சி அடர்ந்த வனத்தினுள் உள்ளது. அங்கு மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி சரி வர இல்லை என்பதால், குறிப்பிட்ட பகுதி வரை ஜீப்புகளில் சென்று, அதன் பிறகு பல கிராமங்களுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

அந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதற்கு 14 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

அப்பகுதி அடர்ந்த வனம் என்பதால் ஓட்டு பதிவு முடிந்ததும் திரும்ப இயலாது. அதனால் நேற்று காலை புறப்பட்டனர். ராஜமலை, பெட்டிமுடி வழியாக தேர்தல் பணிக்குச் சென்ற 13 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த அதிகாரிகள், அதே வழியில் திரும்பினர். மாலை 4:00 மணி வரை ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளிக்கு வந்து சேர்ந்தன.

தமிழகம் வால்பாறை அருகே வனத்தினுள் உள்ள நூறடிகுடிக்கு, தமிழகம் வழியாக 175 கி.மீ., தூரம் பயணம் செய்து அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதே வழியில் திரும்பிய நிலையில் ஓட்டு பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்கு பிறகு மாலை 6:30 மணிக்கு ஓட்டு பதிவு இயந்திரம் வந்து சேர்ந்தது.






      Dinamalar
      Follow us