ADDED : அக் 09, 2025 04:47 AM
அ நிறம் | அளவு
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.
கம்பெனிக்கு சொந்தமான தேவிகுளம் எஸ்டேட் ஓ.டி.கே. டிவிஷனில் வீட்டின் அருகே கட்டியிருந்த பசுவை புலி தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி பரமசிவன் தனது பசுவை வீட்டின் அருகே கட்டியிருந்தார். அங்கு நேற்று அதிகாலை வந்த புலி, பசுவை தாக்கியது.பசுவின் அலறல் சப்தம் கேட்டு உரிமையாளர் உள்பட தொழிலாளர்கள் வந்தால் புலி தப்பி ஓடியது. பலத்த காயத்துடன் பசு உயர் தப்பியது. தேவிகுளம் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
