sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பாலத்தில் போக்குவரத்திற்கு தடை

/

பாலத்தில் போக்குவரத்திற்கு தடை

பாலத்தில் போக்குவரத்திற்கு தடை

பாலத்தில் போக்குவரத்திற்கு தடை


ADDED : நவ 01, 2025 03:19 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் பாதுகாப்பு கருதி போலீசாரின் பரிந்துரைபடி பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மூணாறு நகரில் தபால் அலுவலகம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் ராணுவத்தினர் அமைக்கும் 'பெய்லி' மாதிரியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

பழமை வாய்ந்த பாலத்தின் இரும்புகள் துருப் பிடித்து பலம் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அதன் அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு இரும்பு பாலம் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாலத்தின் நடுவில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.

அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் முன்வரவில்லை. அதனால் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி பாலத்தில் போக்குவரத்தை தடை செய்யுமாறு மூணாறு போலீசார், தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.

அதன்படி அதிகாரிகள் நேற்று போக்குவரத்தை தடை செய்தனர். இந்நிலையில் பாலத்தை சீரமைக்காததை கண்டித்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பாலத்தில் கொடிகளை நட்டி எதிர்ப்பை வெளிபடுத்தினர்.






      Dinamalar
      Follow us