நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: காந்தி கிராம வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி அருகே பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
கல்லூரி மாணவர்கள் சந்தோஷ், கோகுல வாசன், மோனீஸ் தாரகேஸ்வரர், தருண்குமார், மகேஷ் , ஹரிஷ் ஆகியோர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் துறையில் ஆற்றிய பணி, சாதனைகள், பட்டுப் பூச்சி, தேனீ வளர்ப்பு, நீர்ப்பாசனம், அதற்கான பயிற்சிகள் குறித்த விளக்கங்களை பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.