ADDED : செப் 16, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தண்டுபாளையம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 56. வீட்டின் முன் டூவீலரை நிறுத்திவிட்டு காலையில் பார்க்கும்போது காணவில்லை.
சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது இரவில் மர்மநபர் ஒருவர் தனது டூவீலரைதிருடிச்சென்றுள்ளது தெரிந்தது. பெரியகுளம் வடகரை குட்டியப்பர் தெருவைச் சேர்ந்தவர் கார் டிரைவர் மணிகண்டன் 39.
தென்கரை கீழரதவீதியில் டூவீலரை நிறுத்தி விட்டு, வாடகை கார் ஓட்டச்சென்றார் திரும்ப வந்து பார்த்தபோது டூவீலர் திருடப்பட்டது.
தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.