sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை

/

எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை

எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை

எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை


ADDED : நவ 11, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: மார்க்கையன்கோட்டை பேரூராட்சி எல்லப்பட்டியில் மின்மயானம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் எரியூட்டும் மயானம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன . சில பேரூராட்சிகளில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.

இதில் மார்க்கையன் கோட்டையில் 9 வார்டுகளும், உட்கடை கிராமமான எல்லப்பட்டியில் 2 வார்டுகளும், ஒரு வார்டு முத்துச் சாமிபுரத்திலும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பீட்டில் மார்க்கையன்கோட்டையில் எரியூட்டும் மயானம் அமைக்க அரசு அனுமதி வழங்கியது.

பேரூராட்சி நிர்வாகம் மார்க்கையன்கோட்டையில் அமைக்க இடம் தேடிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் எல்லப்பட்டியில் அமைக்க இடம் தேர்வு செய்தனர்.

அதற்கு கடந்த ஆகஸ்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து எல்லப்பட்டி கிராம மக்கள் கலெக்டருக்கு மனு அளித்தனர்.

நேற்று முன்தினம் எல்லப்பட்டியில் எரியூட்டும் மயானம் அமைக்கும் பணிகளை துவக்கினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எல்லப்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரமுள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர்.

செயல் அலுவலர் சிலம்பரசனிடம் மனு அளித்தனர். அதில் 'எரியூட்டும் மயானம் எல்லபட்டிக்கு வேண்டாம்.

மீறி அமைக்கும் பணி செய்தால் போராட்டம் நடத்துவோம்,' என தெரிவித்தனர்.செயல் அலுவலர் சிலம்பரசன் கூறுகையில், 'எரியூட்டும் மயானம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேண்டாம் என்கின்றனர். இதனை கலெக்டருக்கு தெரிவிப்பேன். உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்,' என்றார்.






      Dinamalar
      Follow us