ADDED : நவ 21, 2025 05:12 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி சிந்தியம்மன் கோயில் தெரு ராஜ சேகர் மனைவி லட்சுமி 54. கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது கணவர் சில ஆண்டுக ளுக்கு முன் இறந்தார். இவரது மகன் சுகுமார் குடும்பத்துடன் பக்கத்து தெருவில் உள்ளார். வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த லட்சுமியின் வாயினை அழுத்தி, அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத 25 வயதுடைய மர்ம நபர் பறித்துச் சென்றார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
