/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் திட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மகளிர் திட்ட பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 08, 2026 05:49 AM

தேனி: கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'மகளிர் திட்டத்தில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்துதல், மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் பெற உதவுதல், உங்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறோம். ஊதிய உயர்வு, 10 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம் வழ்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,20 வரை பணியினை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,' என்றார்.

