நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஊர்க்காவல் சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 39, நகை வேலை செய்து வந்த இவருக்கு அந்த வேலை தொடர்ந்து கிடைக்காததால் தச்சு வேலைக்கு சென்றுள்ளார்.
தச்சு வேலையில் கிடைத்த கூலி குறைவாக இருந்ததால் குடும்பத்தை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை என்ற விரக்த்தியில் இருந்துள்ளார். நேற்று முன் தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி சென்மதி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.