ADDED : பிப் 19, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வரலாற்றுத்துறை சார்பில் திறன் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பயிற்சி நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உறவின்முறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் பேசினர். மதுரை பாத்திமா கல்லுாரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்கள் சக்தீஸ்வரி, ஆர்த்தி ஆகியோர் நடைமுறை கற்றல், கற்பிக்கும் திறன் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர்.

