நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகே உலக வன தினவிழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன் தலைமை வகித்தார்.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங், எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தனர். விழாவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.