sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்

/

கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்

கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்

கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்புநடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்


ADDED : ஜூலை 15, 2011 02:30 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கே.டி.சி நகர் பகுதியில் மயான பாதை ஆக்ரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எம்.பி ராமசுப்பு தெரிவித்தார்.கே.டி.சி நகர் வட பகுதி மங்கம்மாள் சாலையில் நபார்டு பாங்க் நிதி உதவி திட்டத்தின் கீழ் 61 லட்சம் செலவில் சாலை பணிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கான பணிகள் சரிவர தொடங்காத நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பணிகளை தொடங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக நெல்லை எம்.பியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதின் பேரில் கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலை, மயான பாதை ஆகிய பகுதிகளை எம்.பி ராமசுப்பு மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.இதுகுறித்து எம்.பி கூறும் போது, 'சாலை பணிகளை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பொது மயான பாதையை ஆக்ரமித்துள்ள வீட்டு வசதி வாரியம் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.இதில் பாளை பி.டி.ஓ தேவிகா, காங்., நிர்வாகிகள் முருகேசன், சுப்பிரமணியன், சரவணன், கீழநத்தம் வட பகுதி பொது நல சங்க தலைவர் முத்தையா, செயலாளர் முகம்மது நாசர், உறுப்பிதனரகள் ராமலிங்கம், ராமமூர்த்தி, சுந்தர்ராஜ், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us