/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
/
மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஜூலை 14, 2011 01:11 AM
திருவேங்கடம் : நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகளை கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட தலைவர் பாண்டித்துரை ஆகியோர் வழிகாட்டுதலுடன் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துராஜ் அறிவித்துள்ளார்.
இதன்படி மாவட்ட தலைவராக குறும்பலாப்பேரி முத்துராஜ், துணைத் தலைவர்கள் தங்கம்மாள்புரம் மாடசாமி, சங்கரன்கோவில் சண்முகவேல், மாவட்ட பொது செயலாளர்களாக சிந்தாமணி, மாரிமுத்து, கீழஆம்பூர் பாலாஜி, மாவட்ட செயலாளராக கரிவலம்வந்தநல்லூர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர்களாக ஊத்துமலை சிவசங்கரகிருஷ்ணன், கீழப்பாவூர் சுடர்ராஜன், சங்கரன்கோவில் முத்துகிருஷ்ணன், சுப்புலாபுரம் பாலகிருஷ்ணன், பூவன்குறிச்சி ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒன்றிய இளைஞர் அணி தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் ஒன்றிய தலைவராக அண்ணாமலைபுதூர் சாமித்துரை, கடையம் ஒன்றிய தலைவராக பொட்டல்புதூர் ரத்தினகுமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவராக ஆலடிப்பட்டி குட்டிராஜ் பாண்டியன், தென்காசி நகர தலைவராக கீழப்புலியூர் கருப்பசாமி, புளியங்குடி நகர தலைவராக டி.என்.புதுக்குடி சீதாராமன், வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவராக எம்.ஜி.ஆர்.நகர் சக்திவேல்முருகன், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவராக கரிவலம்வந்தநல்லூர் பாலமுருகன், சங்கரன்கோவில் நகர தலைவராக ராமகிருஷ்ணன், குருவிகுளம் ஒன்றிய அமைப்பாளராக புதுசுப்புலாபுரம் அருணாசலம், செங்கோட்டை நகர அமைப்பாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இத்தகவலை நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி தலைவர் தெரிவித்துள்ளார்.

