sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல்

/

பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல்

பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல்

பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல்


ADDED : பிப் 20, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலி போட்டு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் வடக்கு பைபாஸ் மதுரை, சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் நின்று செல்லும் பகுதியாகும். எப்போதும் கூட்டம் இருக்கும் அந்த பகுதியில், ஒரே ஒரு பயணியர் நிழற்குடை உள்ளது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்காருவதற்காக அங்குள்ள இருசக்கர வாகன காப்பகம் நடத்துபவர்கள், நிறுவனத்தின் வாசலில் நான்கைந்து பிளாஸ்டிக் சேர்களை போட்டு, அதில் உட்காருவதற்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

பஸ்சுக்கு காத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மனிதாபிமானமற்ற செயல் என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பயணியர் நிழல் குடை, இருக்கை வசதியை மாநகராட்சி செய்து தர வேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

===================






      Dinamalar
      Follow us