/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது
/
மோதலில் ஈடுபட்ட 7 மாணவர்கள் கைது
ADDED : ஜூலை 03, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைவேளையின்போது பிளஸ்டூ பயிலும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பாக ஜாதி ரீதியாக பிரிந்து அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர். மோதலில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.