/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்
/
மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்
மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்
மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி பிடிபட்டார்
ADDED : ஜூலை 09, 2024 08:40 PM

வள்ளியூர்:வள்ளியூர் அருகே மருத்துவமனையில், 5 லட்சம் ரூபாய் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில், டாக்டர் ஆன்றோ ரொமைன் தாஸ் மருத்துவமனை நடத்துகிறார். கடந்த மாதம் 25-ம் தேதி, கர்நாடகா மாநிலம் மைசூரு அருகேயுள்ள சான்சத்திர ஹள்ளி பாரத் நகரைச் சேர்ந்த ஜீவன்லால், 57, என்பவர் சிகிச்சைக்காக இங்கு வந்தார். சிகிச்சை முடிந்து கிளம்பும்போது, டாக்டர் அறையில் இருந்த 5 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து கொண்டு சென்றார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், மைசூர் அருகே பிருந்தாவனத்தில் பதுங்கியிருந்த ஜீவன்லாலை கைது செய்து, 1.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.