/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.
/
மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.
மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.
மணல் கடத்தல் நபரை 4 மணி நேரம் காத்திருந்து கைது செய்தார் ஏ.எஸ்.பி.
ADDED : ஆக 31, 2024 01:51 AM

திருநெல்வேலி:நள்ளிரவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை நான்கு மணி நேரம் அவரது வீட்டில் காத்திருந்து கைது செய்தார் நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்ன குமார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வெங்கட்ராயபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது. தகவல் அறிந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் போலீஸ் படையினருடன் அங்கு சென்றார்.
அந்த கும்பல் போலீசை கண்டதும் மணல் அள்ளும் இயந்திரம், டூவீலர்களை விட்டுவிட்டு தப்பி சென்றது. கும்பல் தலைவன் கங்கை ஆதித்தன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
நள்ளிரவில் சாத்தான்குளத்தில் உள்ள கங்கைஆதித்தன் வீட்டிற்கு ஏ.எஸ்.பி., சென்றார். ஆனால் அவரை வீட்டிற்குள் வைத்துக்கொடு கதவை பூட்டிக்கொண்டனர். அவரது குடும்பத்தினரோ, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களோ அவரை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. மேலும் கொலையா செய்து விட்டார், மணல் கடத்தலுக்கு நள்ளிரவில் கைது செய்வீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இரவில் நான்கு மணி நேரமாக காத்திருந்து போலீசார் கங்கை ஆதித்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.