sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆன்லைனில் கேம் விளையாடுவதில் மோதல்: 21 மாணவர் மீது வழக்கு 9 பேர் கைது

/

ஆன்லைனில் கேம் விளையாடுவதில் மோதல்: 21 மாணவர் மீது வழக்கு 9 பேர் கைது

ஆன்லைனில் கேம் விளையாடுவதில் மோதல்: 21 மாணவர் மீது வழக்கு 9 பேர் கைது

ஆன்லைனில் கேம் விளையாடுவதில் மோதல்: 21 மாணவர் மீது வழக்கு 9 பேர் கைது


ADDED : ஆக 17, 2024 01:27 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி உள்ளது.

அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பஸ் ஸ்டாண்டில் இரு அணிகளாக பிரிந்து அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடினர்.

இரு தரப்பிற்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. கங்கனாங்குளம் பகுதியில் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். ஒரு தரப்பினருக்கு ஆதரவாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எதிர்தரப்பு மாணவர்களை தாக்கினர்.

சேரன்மாதேவி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் மீதும், மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீதும் என 21 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

கங்கனான்குளத்தை சேர்ந்த சின்னராஜு 26, பாலகிருஷ்ணன் 25, மகேஷ் 21, அந்தோணிதாசன் 46, பட்டுசுந்தர் 38, தங்கம் 24, மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us