ADDED : ஜூலை 10, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பணகுடி அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ், 41, கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு ராபின், 14, காவியா, 11, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். உமா, அண்மையில் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்; ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார்.
மனைவி வெளிநாடு செல்ல வாங்கிய கடன், போதிய வருமானம் இன்மையால், ரமேஷ் சிரமப்பட்டார். கடன் பிரச்னையில் தத்தளித்தவர் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.