/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையில் தீ விபத்து
/
நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையில் தீ விபத்து
நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையில் தீ விபத்து
நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையில் தீ விபத்து
ADDED : மே 30, 2024 10:47 PM

திருநெல்வேலி:நெல்லை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் நேற்று மாலை தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனை வண்ணார்பேட்டை ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. பணிமனையில் பழைய ஆயில் பில்டர்கள் உட்பட பல்வேறு கழிவு பொருட்கள் ஏலம் விடுவதற்காக கடந்த சில மாதங்களாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை தாமிரபரணி கரையோரத்தில் படர்ந்திருந்த முட்புதர்களை அகற்றி அரசு போக்குவரத்து கழக பணிமனை காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். காற்றுவேகமாக வீசியதால் தீப்பொறி போக்குவரத்து கழக பணிமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவில் விழுந்து தீ பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதனையறிந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பேட்டை, பாளை நிலைய தீயணைப்பு வீரர்கள் பணிமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் ஏற்பட்ட தீயை சுமார் 3 மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.