ADDED : ஜூலை 13, 2024 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே தடியம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்தானம் 44.
இவரது மனைவி பூமாரி 42. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே பிரச்னையில் தகராறு ஏற்பட்டது அப்போது பூமாரி ,கணவனை கல்லால் தாக்கினார். இதில் சந்தானம் வீட்டு முன் ரத்தக்காயங்களுடன் இறந்தார். பூமாரியை மானூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.