sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குப்பைக்கு போன புது வாகனங்கள்; ஸ்மார்ட் சிட்டி நிதி வீணடிப்பு

/

குப்பைக்கு போன புது வாகனங்கள்; ஸ்மார்ட் சிட்டி நிதி வீணடிப்பு

குப்பைக்கு போன புது வாகனங்கள்; ஸ்மார்ட் சிட்டி நிதி வீணடிப்பு

குப்பைக்கு போன புது வாகனங்கள்; ஸ்மார்ட் சிட்டி நிதி வீணடிப்பு

1


UPDATED : செப் 07, 2024 03:07 AM

ADDED : செப் 07, 2024 02:57 AM

Google News

UPDATED : செப் 07, 2024 03:07 AM ADDED : செப் 07, 2024 02:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாங்கப்பட்ட டிராக்டர்கள், ரோடு சுத்தப்படுத்தும் வாகனம் உள்ளிட்டவை டிரைவர்கள் இல்லாததால் குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பான்மையான பணிகள் கட்டடங்களாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரோடுகளை சுத்தப்படுத்தும் இயந்திரம், நவீன டிராக்டர்கள் என பல்வேறு வாகனங்கள் வாங்கப்பட்டன. ஆனால் அவற்றிற்கு டிரைவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.

Image 1317802
தற்போது தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. மாநகராட்சிக்கு கூடுதல் வாடகை செலுத்த வேண்டும் என்பதால் அந்த நிறுவனமும் இந்த டிராக்டர்களை பயன்படுத்துவதில்லை. இதனால் புதிய வாகனங்கள் குப்பை கிடங்குகளில் கிடக்கின்றன. மைய அலுவலகத்தில் உள்ள டிராக்டர்கள், வாகனங்களில் இருந்த பேட்டரிகளும் திருடப்பட்டு விட்டன.

Image 1317803
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ராவிடம் கேட்க முயற்சித்த போது அவர் புதுச்சேரி சென்றிருந்ததால் பதிலளிக்கவில்லை. மேயர் ராமகிருஷ்ணன் கூறுகையில், பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us