sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி

/

நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி

நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி

நகராட்சி தி.மு.க., தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி


ADDED : ஜூன் 27, 2024 02:20 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தி.மு.க.,தலைவருக்கு எதிராக அக்கட்சி உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனரிடம் கடிதம் கொடுத்தனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, கடையநல்லூர் நகராட்சி, சங்கரன்கோவில் நகராட்சி என பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., மேயர், தலைவர்களுக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த செல்வ சுரேஷ் பெருமாள் உள்ளார்.

மொத்தம் 21 கவுன்சிலர்கள். இரண்டு பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 19 கவுன்சிலர்களில் அ.தி.மு.க.,வினர் 3 பேர். துணைத்தலைவர் மற்றும் ஒருவரை தவிர்த்து 13 தி.மு.க, கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 14 பேர் கையொப்பமிட்டு நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி அதற்கான கடிதத்தை நேற்று நகராட்சி கமிஷனர் மகேஸ்வரனிடம் கொடுத்தனர்.

இந்நகராட்சியில் மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.






      Dinamalar
      Follow us