/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 22, 2024 01:05 AM

திருநெல்வேலி : தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல் மின் நிலைய இன்ஜினியர் காந்தி 62, வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காந்தி வீடு மட்டக்கடை வடக்கு வாணியன் விளையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் வசிக்கும் மகன் வீட்டிற்கு காந்தியும், அவர் மனைவியும் சென்றனர். நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
* திருநெல்வேலி மாவட்டம் கோவில்குளம் மாரிமுத்து. நெல் அறுவடை இயந்திர டிரைவர். அவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.