/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி
/
எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி
ADDED : பிப் 22, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். துாத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா, 45. கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் டூ - வீலர்கள், பேட்டரிகள் கோழிப்பண்ணையில் உள்ள அறையில் சார்ஜ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தன. பிப்., 15 காலையில் அங்கு ஜான்சி பாப்பா சென்றபோது, ஒரு பேட்டரி திடீரென வெடித்தது. அவர் படுகாயமுற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார்.

