தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ வன்முறையை துாண்டும் பதிவுகள் 2 பேர் கைது

 வன்முறையை துாண்டும் பதிவுகள் 2 பேர் கைது

 வன்முறையை துாண்டும் பதிவுகள் 2 பேர் கைது


ADDED : மார் 08, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 11 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், இருவரை கைது செய்தனர்.

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மார்ச் 2 வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் கொலை செய்யப்பட்டனர். ஐந்து பேர் வெட்டுக்காயமடைந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை துாண்டும் வகையிலும், பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இருவரை கைது செய்துள்ள போலீசார், 2 சிறுவர்களை பிடித்தனர். சமூக வலைதளப் பதிவுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us