/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மூதாட்டியை கட்டிப்போட்டு 26 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை
/
மூதாட்டியை கட்டிப்போட்டு 26 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை
மூதாட்டியை கட்டிப்போட்டு 26 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை
மூதாட்டியை கட்டிப்போட்டு 26 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை
ADDED : ஜன 17, 2026 05:41 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லியில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். நகைகள் மீட்கப்பட்டன.
சுத்தமல்லி அருகே பொன்விழா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். மனைவி ஆண்டிச்சி 65.
ஜன., 8ம் தேதி பகலில் மாரியப்பன் வெளியே சென்றிருந்தார். ஆண்டிச்சி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரது வாயில் துணியை வைத்ததோடு, கயிற்றால் கட்டி போட்டு விட்டு அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி உட்பட 10 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், 6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சுத்தமல்லி போலீசார் விசாரித்தனர்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் அதே பகுதியில் இன்னொரு காலனியில் வசிக்கும் சுந்தர் 28, மணிகண்டன் 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொள்ளையடித்த நகைகளை சென்னையில் அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது.
போலீசார் நகைகளையும் மீட்டனர்.

