sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது

/

நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது

நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது

நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல்; தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது

1


ADDED : மார் 05, 2025 12:37 PM

Google News

ADDED : மார் 05, 2025 12:37 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: அம்பையில் அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி வசூல் செய்த தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி, கந்துவட்டி வசூலித்ததாக புகார் எழுந்தது. இவருடன் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இருவரும் சேர்ந்து வட்டி பேரில் பணம் கொடுத்து மக்கள் மீது அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வி.கே.புரத்தில் கூலி தொழிலாளி சுரேஷின் மனைவி ரேவதி, உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக சுரேஷிடம் கடன் பெற்றிருந்தார். பணம் செலுத்த தாமதமானதால், நிதி நிறுவனத்தினர் அவரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், உரிய அனுமதி இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி, கந்துவட்டி வசூலித்த தி.மு.க., பிரமுகர் சுரேஷ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us