sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது

/

பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது

பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது

பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது

5


UPDATED : ஜூலை 14, 2025 08:48 AM

ADDED : ஜூலை 14, 2025 06:37 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2025 08:48 AM ADDED : ஜூலை 14, 2025 06:37 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாடியவர்களை கண்டித்தவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பாசமுத்திரம் அருகே முடப்பாலம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 65, எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சில வாலிபர்கள் ரோட்டில் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடி கூச்சலிட்டனர். இதனை ரவிச்சந்திரன் கண்டித்தார். வாலிபர்கள் கேட்காததால் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் இடையூறு செய்தவர்களைக் கண்டித்து அனுப்பினர்.

அதிகாலை 1:00 மணியளவில் ரவிச்சந்திரன், குடும்பத்தினர் தூங்கிய போது அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டின் முன் பகுதி சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சத்தம் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து வெளியே வந்த போது பெட்ரோல் குண்டு கிடப்பதை கண்டனர்.

ரவிச்சந்திரன் மீண்டும் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் முடப்பாலம் பகுதியைச்சேர்ந்த சுனில்ராஜ் 20, முகேஷ் 20, மூர்த்தி 20, முத்து 24 ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us