/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்
/
ஒளி, ஒலி அமைப்பாளரை கொன்ற 4 பேர் சிக்கினர்
ADDED : டிச 29, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: ஒளி, ஒலி அமைப்பாளரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மூன்று சிறுவர் உட்பட நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், காக்கநல்லுாரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 51, ஒளி, ஒலி அமைப்பாளர். நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில் ஊருக்கு சென்றபோது, ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி, கொலை செய்தது.
இதை கண்டித்து, அவரின் கிராம மக்கள் மறியல் செய்தனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் பேச்சு நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, 19, மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்களை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

