sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பெண் ஏட்டு மண்டை உடைப்பு பெண் உட்பட 7 பேர் கைது

/

பெண் ஏட்டு மண்டை உடைப்பு பெண் உட்பட 7 பேர் கைது

பெண் ஏட்டு மண்டை உடைப்பு பெண் உட்பட 7 பேர் கைது

பெண் ஏட்டு மண்டை உடைப்பு பெண் உட்பட 7 பேர் கைது


ADDED : டிச 27, 2024 02:39 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த இரு தரப்பினர் மோதிக் கொண்டு கம்பியால் தாக்கியதில் ஏட்டு ராமலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திசையன்விளை அருகே நம்பிகுறிச்சியை சேர்ந்த ராஜேஷுக்கும் கனிஷ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கனிஷ்கர் தரப்பினர் மீது புகார் கொடுக்க நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ராஜேஷ் தரப்பினர் திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

அப்போது கனிஷ்கர் தரப்பினரும் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

இருவரும் ஸ்டேஷனிலும் மோதிக்கொண்டனர். கனிஷ்கர் கையில் வைத்திருந்த கம்பியால் ராஜேஷ் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினார்.

அது தவறுதலாக இடையில் நின்ற ஏட்டு ராமலட்சுமியின் தலையை பதம் பார்த்தது. தலையில் பலத்த காயமடைந்த ராமலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜேஷ், ஏட்டு ராமலட்சுமி ஆகியோரது புகாரின் பேரில் கனிஷ்கர், அவரது தந்தை இசக்கிமுத்து, தாயார் மாலதி, சகோதரர்கள் பிரவீன், ஹரி பிரசாத் உறவினர் ஸ்டீபன், ஒரு சிறுவன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us