sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் 'மேக்கப்'

/

தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் 'மேக்கப்'

தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் 'மேக்கப்'

தாமிரபரணியில் சாக்கடை கலக்கும் இடங்களில் நீதிபதிகள் குழு ஆய்வு ப்ளீச்சிங் பவுடர், பூந்தொட்டிகளுடன் திடீர் 'மேக்கப்'

4


ADDED : நவ 09, 2024 02:33 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:33 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் துவங்கி துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை, 75 கி.மீ., துாரம் பாயும் தாமிரபரணி ஆறு ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், இரு மாவட்ட விவசாயத்திற்கும் பயன்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சிகளின் கழிவுநீர் பல்வேறு இடங்களில் தாமிரபரணியில் கலப்பதால் மாசுபடுகிறது.

கடந்த, 2018ல் எழுத்தாளர் செய்துங்கநல்லுார் காமராஜ், நகராட்சிகளின் கழிவுகளை தாமிரபரணியில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணியில் உள்ள பழமையான மண்டபங்கள், படித்துறைகளை சீரமைக்க கோரியும் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஆறாண்டுகளுக்கு பிறகு மார்ச் 11ல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி வழங்கிய தீர்ப்பில், 'தாமிரபரணியில் உள்ளாட்சிகளின் கழிவுநீர் கலக்கக்கூடாது.

'மண்டபங்கள், படித்துறைகளை ஹிந்து அறநிலையத்துறை சீரமைக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தனர். 16 துறையினருக்கு அந்த உத்தரவை அமல்படுத்தவும் அனுப்பினர்.

ஆனால், திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாக்கடை கழிவுநீர் தாமிரபரணியில் கலக்கிறது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தாதது குறித்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நவ., 5ல் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆஜராக மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.

கோர்ட்டில் ஆஜரான அவர், 'திருநெல்வேலி மாநகராட்சியில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

'இதில், முதல் கட்டம் நிறைவு பெற்று விட்டது. இரண்டாவது கட்டத்தில், 90 சதவீதம் முடிந்து விட்டது. 2025 செப்டம்பருக்குள் மூன்றாவது கட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்ற பிறகு தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலக்காது' என, உறுதி அளித்தார்.

இருப்பினும், அவர் மாநகராட்சி கூட்டத்தில் தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தங்களால் எதுவும் செய்ய முடியாது என, தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்போதைய நிலை குறித்து நவ., 10ல் நாளை தாமிரபரணியை ஆய்வு செய்ய வருகிறோம் என, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று மாநகராட்சியில் சாக்கடை அதிக அளவில் கலக்கும் இடங்களில் துாய்மை பணி யாளர்களை கொண்டு சுத்தப் படுத்தும் பணி நடந்தது.

நீதிபதிகள் செல்லும் பாதையையும் பெருக்கி துாய்மைப்படுத்தினர். சாக்கடை துர்நாற்றம் தெரியாதவாறு ப்ளீச்சிங் பவுடர் துாவி பூந்தொட்டிகளை வைத்து தாமிரபரணிக்கு திடீர் மேக்கப் செய்தனர்.






      Dinamalar
      Follow us