sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

/

தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

தியேட்டரில் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு போலீஸ் சோதனை

3


ADDED : டிச 29, 2024 02:00 AM

Google News

ADDED : டிச 29, 2024 02:00 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்த போது நவ.,16 அதிகாலையில் தியேட்டர் மீது அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இது தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் ரஸின், ஆசுரான் மேலத் தெருவைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி ஆகியோரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை மேலப்பாளையத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கைதானவர்களின் வீடுகளில் திடீர் சோதனை மேற் கொண்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக இம்தியாஸ், சிராஜுதீன், கோலா பாதுஷா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது. பிறகு சிராஜுதீன், கோலா பாதுஷா ஆகியோரை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கைதானவர்களுக்கு சிம் கார்டு கொடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிசாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடுகளில் சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், அலைபேசி, சிம் கார்டுகளை கொண்டும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us