/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது
/
கழிவு மருந்து கொட்டிய பிரதிநிதி கைது
ADDED : பிப் 11, 2025 05:29 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில், மருத்துவக் கழிவுகளை ரோட்டோரம் கொட்டிய மருந்து நிறுவன பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ராஜகோபாலபுரம், நான்குவழிச் சாலையில் சில தினங்களுக்கு முன் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.
ஏற்கனவே பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால், இதுகுறித்தும் சர்ச்சை ஏற்பட்டது.
பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர். சமாதானபுரம் சக்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன், 35, என்பவர் ஒரு மருந்து கம்பெனியில் பிரதிநிதியாக இருந்தார்.
அவருக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் காலாவதியானால், அவற்றை அவர், 10 மாதங்களுக்கு முன் ரோட்டோரமாகக் கொட்டினார்.
இதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

