/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.4000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
/
ரூ.4000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
ADDED : ஏப் 17, 2025 01:53 AM

திருநெல்வேலி:தந்தையின் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தவரிடம் ரூ 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் பாலசிங். எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். தந்தையின் பெயரில் இருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருந்தார். தச்சநல்லூர் வார்டு பில் கலெக்டராக பணிபுரியும் காளி வசந்த் 27, என்பவர் பெயர் மாற்றம் செய்ய ரூ 4 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
லஞ்ச ஒழிப்பு ஏ .டி.எஸ்.பி., எஸ்காலிடம் பாலசிங் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் தச்சநல்லூர் வார்டு அலுவலகத்தில் இருந்தனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காளி வசந்திடம் பாலசிங், கொடுத்தார் அப்போது கையும் களவுமாக அவரை போலீசார் கைது செய்தனர்.
காளி வசந்த்தின் தந்தை திருநெல்வேலி மாநகராட்சியில் சாலை பணியாளராக பணியாற்றியவர். அவர் இறந்த பின் பணியில் சேர்ந்து தற்போது இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் சிறையில் அடைத்தனர்