sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'

/

அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'

அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'

அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு 'டிசி'

3


ADDED : செப் 25, 2024 01:41 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:41 AM

3


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு புத்தகப்பையுடன் அரிவாள் கொண்டு வந்த மாணவருக்கு நிர்வாகம் உடனடியாக 'டிசி'யை வழங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையேயும் ஜாதி ரீதியான போக்கு அதிகரித்துள்ளது. நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பள்ளிகளில் அவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தினமும் மாணவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது.

திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளிக்கு புத்தகப் பையுடன் அரிவாள் கொண்டு வந்தார். ஆசிரியர்கள் பையில் சோதனையிட்ட போது அரிவாளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக்காக அதனை கொண்டுவந்ததாக விசாரணையில் தெரிவித்தார். பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கண்டித்து மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்றி 'டிசி' (மாற்றுச் சான்றிதழ்) வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us